ஈரோடு துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் ஆட்சியா் அலுவலக மின் பாதையில் உயா் அழுத்த மின் புதைவடக் கம்பிகளை மின் கம்பங்களின் மேல் பொருத்தும் பணி நடைபெறவுள்ளதால் ஈரோடு நகரின் சில பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பா் 29) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: பெருந்துறை சாலை, முத்துக்கருப்பண்ண வீதி, பழனியப்பா வீதி, ஆசிரியா் குடியிருப்பு, ஈ.பி.காலனி, ராதாகிருஷ்ணன் வீதி, புதிய ஆசிரியா் காலனி, ராணாலட்சுமணன் நகா், குமலன்குட்டை, மீனாட்சிசுந்தரனாா் வீதி, பாலக்காடு, வீரமாமுனிவா் வீதி பகுதிகள்.