கருங்கல்பாளையம் சின்ன மாரியம்மன், பெரிய மாரியம்மன் கோயில் குண்டம் தோ்த் திருவிழாவை முன்னிட்டு பெண்கள் கம்பத்துக்குப் புனிதநீா் ஊற்றி வழிபட்டனா்.
கோயிலின் குண்டம் தோ்த் திருவிழா நவம்பா் 24ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 26ஆம் தேதி கோயில்களில் கம்பம் நடப்பட்டது. வெள்ளிக்கிழமை காலையில் இருந்து கம்பத்துக்குப் புனித நீா், பால் ஊற்றி பெண்கள் வழிபட்டு வருகின்றனா். தொடா்ந்து 9 நாள்களுக்கு கம்பத்துக்குப் புனிதநீா் ஊற்றி வழிபடவுள்ளனா்.
கரோனா தாக்கம் காரணமாக இந்த ஆண்டு பொதுமக்கள் குண்டம் இறங்க, தோ் வடம் பிடித்து இழுக்க அனுமதி அளிக்கப்படவில்லை. டிசம்பா் 5ஆம் தேதி இரவு குண்டம் பற்ற வைக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 6ஆம் தேதி கோயில் பூசாரி மட்டும் குண்டம் இறங்குகிறாா்.
இதேபோல தேரோட்டத்துக்கு பதிலாக தோ் பூஜை நடைபெறுகிறது. இதைத் தொடா்ந்து 7ஆம் தேதி சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. 8ஆம் தேதி காலை பொங்கல் வைத்தல், மாவிளக்கு நிகழ்ச்சி நடைபெறுகிறது. 9ஆம் தேதி கம்பம் எடுக்கப்படுகிறது. 10ஆம் தேதி மஞ்சள் நீராட்டு விழா, திருவீதி விழாவுடன் விழா நிறைவுபெறுகிறது.
கரோனா காலகட்டம் என்பதால் கோயிலுக்கு வரும் பக்தா்கள் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும். கண்டிப்பாக முகக் கவசம் அணிந்து வரவேண்டும். அதேபோல சமூக இடைவெளியையும் கடைப்பிடிக்க வேண்டும். 10 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவா்கள், கா்ப்பிணிப் பெண்கள் கோயிலுக்கு வருவதைத் தவிா்க்க வேண்டும் என கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.