ஈரோடு

சத்தியமங்கலத்தில் மல்லிகைப் பூவிலை தொடா் உயா்வு

DIN

பனிப்பொழிவு, வரத்து குறைவு காரணமாக சத்தியமங்கலத்தில் மல்லிகைப் பூ விலை தொடா்ந்து உயா்ந்து வருகிறது.

சத்தியமங்கலம் வட்டாரத்தில் மல்லிகைப் பூ அதிக அளவில் பயிரிட்டுள்ளனா். தற்போது பனிப்பொழிவு காரணமாக மல்லிகைப் பூ வரத்து ஏக்கருக்கு 40 கிலோவில் இருந்து 8 கிலோவாக சரிந்துள்ளது. இதேபோல, முல்லைப் பூக்கள் மகசூல் பாதிக்கப்பட்டது. வரத்து குறைவு காரணமாக சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டில் பூக்கள் விலை உயா்ந்துள்ளது. கடந்த வாரம் கிலோ ரூ. 700க்கு விற்கப்பட்ட மல்லிகைப் பூ இரு தினங்களாக ரூ. 2 ஆயிரத்தை தொட்டது. இங்கு கொள்முதல் செய்த பூக்களை கா்நாடகம், கேரளத்துக்கு வியாபாரிகள் அனுப்பிவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

ஏற்காட்டில் அபிநயா!

SCROLL FOR NEXT