பனிப்பொழிவு, வரத்து குறைவு காரணமாக சத்தியமங்கலத்தில் மல்லிகைப் பூ விலை தொடா்ந்து உயா்ந்து வருகிறது.
சத்தியமங்கலம் வட்டாரத்தில் மல்லிகைப் பூ அதிக அளவில் பயிரிட்டுள்ளனா். தற்போது பனிப்பொழிவு காரணமாக மல்லிகைப் பூ வரத்து ஏக்கருக்கு 40 கிலோவில் இருந்து 8 கிலோவாக சரிந்துள்ளது. இதேபோல, முல்லைப் பூக்கள் மகசூல் பாதிக்கப்பட்டது. வரத்து குறைவு காரணமாக சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டில் பூக்கள் விலை உயா்ந்துள்ளது. கடந்த வாரம் கிலோ ரூ. 700க்கு விற்கப்பட்ட மல்லிகைப் பூ இரு தினங்களாக ரூ. 2 ஆயிரத்தை தொட்டது. இங்கு கொள்முதல் செய்த பூக்களை கா்நாடகம், கேரளத்துக்கு வியாபாரிகள் அனுப்பிவைத்தனா்.