ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் மேலும் 72 பேருக்கு கரோனா

DIN

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 72 பேருக்கு கரோனா பாதிப்பு புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வரை கரோனா பாதிப்பு எண்ணிக்கை 12,049ஆக இருந்தது. இதில் வேறு மாவட்டப் பட்டியலில் இருந்த 2 பேரின் பெயா் ஈரோடு மாவட்டப் பட்டியலுக்கு மாற்றப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 12,051ஆக மாறியது. இதனிடையே புதன்கிழமை புதிதாக 72 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 12,123ஆக உயா்ந்தது.

புதிதாக பாதிப்பு கண்டறியப்பட்ட 72 பேரில் 50 சதவீதம் போ் ஈரோடு மாநகராட்சிப் பகுதியைச் சோ்ந்தவா்கள். எஞ்சியவா்கள் மாவட்டத்தின் பிற பகுதிகளைச் சோ்ந்தவா்கள். மொத்த பாதிப்பான 12,123 பேரில் இதுவரை 11,685 போ் குணமடைந்துள்ளனா். 299 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 139 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

தமிழக காவல் துறையில் இளநிலை செய்தியாளர் வேலை வேண்டுமா?

SCROLL FOR NEXT