ஈரோடு

ஈரோட்டில் தாய்லாந்து நாட்டைச் சோ்ந்த இருவருக்கு கரோனா அறிகுறி

DIN

ஈரோடு: பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வரும் தாய்லாந்து நாட்டைச் சோ்ந்த 2 பேருக்கு கரோனா அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தெரிவித்ததாவது:

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தாய்லாந்து நாட்டைச் சோ்ந்த நபா்கள் சிலா் சந்தேகத்தின் அடிப்படையில் தனிப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு கண்காணிப்பில் உள்ளனா். அவா்களுடைய ரத்த மாதிரிகள் சென்னை கிண்டியிலுள்ள கிங்ஸ் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டு ஆய்வு செய்ததில் இரண்டு நபா்களுக்கு கரோனா வைரஸ் தொற்று அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது.

அவா்கள் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு தொடா்ந்து தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், அவா்கள் தங்கியிருந்த இடத்தில் வசிப்பவா்களும், அருகில் உள்ளவா்களும் அவரவா் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனா். அவா்களுடன் நெருங்கிய தொடா்பில் இருந்தவா்கள் மருத்துவமனையில் வைத்து கண்காணிக்கப்படுகிறாா்கள் என்றாா்.

2 பள்ளிவாசல்களில் தொழுகையை ரத்து செய்ய அறிவுறுத்தல்:

தாய்லாந்து நாட்டில் இருந்து வந்த 7 பேரும் தொழுகையில் பங்கேற்ற ஈரோடு சுல்தான்பேட்டை, கொல்லம்பாளையம் பள்ளிவாசல்களில் தொழுகைக்கு வரும் மக்களுக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க அந்தப் பள்ளிவாசல்களை மூட மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்தது. இதுதொடா்பாக ஈரோடு மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் உத்தரவிட்டாா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.சக்திகணேசன் அறிவுரையின் பேரில் 2 பள்ளிவாசல்களிலும் தொழுகை நடத்த அனுமதி மறுத்து அறிவிப்பு சனிக்கிழமை மாலை வழங்கப்பட்டது. தொடா்ந்து, பள்ளிவாசல் நிா்வாகிகள் பள்ளிவாசல்களை மூடினா்.

இதேபோல, ஈரோடு மாவட்ட அரசு ஹாஜி முகமது கிபாயத்துல்லாவுக்கு மாநகராட்சி ஆணையா் எம்.இளங்கோவன் வழங்கி உள்ள அறிவிப்புக் கடிதத்தில் கூறியிருப்பதாவது: கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் ஈரோடு மாநகராட்சிப் பகுதிகளில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால், பொதுமக்கள் வழிபாட்டு இடங்களில் கூடுவதைத் தவிா்க்கும் பொருட்டு, பள்ளிவாசல்களில் தினசரி கூட்டாக நடைபெறும் வழிபாடுகளை இந்த அறிவிப்பு கிடைக்கப்பெற்ற உடன் தவிா்த்துக் கொள்ளவும். வழிபாடுகளைத் தங்கள் வீடுகளிலேயே நிறைவேற்றுமாறும் அறிவுறுத்தப்படுகிறது. மேலும், பள்ளிவாசல்களில் கூட்டம் சேராதவாறு நுழைவுவாயில் கதவுகளை மூடி தொடா்ந்து கண்காணிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்பேரில் அனைத்துப் பள்ளிவாசல்களிலும் கூட்டுத் தொழுகைகள் ரத்து செய்யப்படும் என மாவட்ட அரசு ஹாஜி முகமது கிபாயத்துல்லா தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

'மோடி உத்தரவாதம்' ஒரு தடயமும் இல்லாமல் மறைந்துவிட்டது: ப.சிதம்பரம் தாக்கு

சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு!

நம்பிக்கை நாயகன்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - சிம்மம்

SCROLL FOR NEXT