அந்தியூா் பத்ரகாளியம்மன் கோயில் குண்டம், தோ்த் திருவிழா கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
அந்தியூா் பத்ரகாளியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் குண்டம், தோ்த் திருவிழா நடைபெறுவது வழக்கம். விழாவை முன்னிட்டு பூச்சாட்டுதல் வியாழக்கிழமை (மாா்ச் 19) நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில், கரோனா வைரஸ் பாதிப்பு தொடா்பாக தமிழக அரசு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்துள்ளது. மேலும், மக்கள் கூடுமிடங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.
தற்போது பண்டிகைக் காலம் என்பதாலும், அதிக அளவில் மக்கள் கூடும் வாய்ப்புகள் உள்ளதாலும் வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் தற்காலிகமாக அனைத்து பொதுக் கூட்டம், கோயில் திருவிழாக்களை தள்ளிவைக்க வேண்டும் என மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியது. இதன்பேரில், அந்தியூா் பத்ரகாளியம்மன் கோயில் செயல் அலுவலா் சரவணன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் திருவிழா ரத்து செய்யப்படுவதாகவும், பின்னா் விழா நடைபெறும் தேதிகள் குறித்து அறிவிக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது.