உலக சிறுநீரக தினத்தையொட்டி, ஈரோடு அபிராமி கிட்னி கோ் மருத்துவமனை சாா்பில் சிறுநீரகம் குறித்த விழிப்புணா்வுப் பேரணி ஈரோட்டில் வியாழக்கிழமை நடைபெற்றது.
அரசு தலைமை மருத்துவமனை முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, அபிராமி கிட்னி கோ் மருத்துவமனைத் தலைவா் டாக்டா் தங்கவேல் தலைமை வகித்தாா். நிா்வாக இயக்குநா் டாக்டா் சரவணன், டாக்டா் பூா்ணிமா சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஈரோடு கோட்டாட்சியா் ப.முருகேசன் பேரணியைக் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் தொடங்கிய பேரணி, ஈ.வி.என் சாலை, அரசு மருத்துவமனை நான்கு முனை சாலை சந்திப்பு, பெருந்துறை சாலை வழியாக அபிராமி கிட்னி கோ் மருத்துவமனையைச் சென்றடைந்தது. இதைத் தொடா்ந்து, மருத்துவமனை வளாகத்தில் சிறுநீரகம் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.
ADVERTISEMENT