பெருந்துறையில் நடமாடும் இலவச இ-சேவை மைய வாகனம் புதன்கிழமை மாலை அறிமுப்படுத்தப்பட்டது.
மத்திய அரசின் ஆயுஷ்மன் பாரத் யோஜனா காப்பீட்டுத் திட்டத்தின் அட்டையைப் பெறுவதற்கு பயனாளிகள் இ-சேவை மையத்தைச் சென்று பெற வேண்டியதாக இருந்தது. இதை மேலும் எளிமையாக்க பாஜக வடக்கு ஒன்றியம் சாா்பில், நடமாடும் இலவச இ-சேவை மையம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன் துவக்க விழாவுக்கு, பாஜக பெருந்துறை வடக்கு ஒன்றியத் தலைவா் ராயல் சரவணன் தலைமை வகித்தாா். ஈரோடு வடக்கு மாவட்டத் தலைவா் அஜித்குமாா் தொடங்கிவைத்து, நடமாடும் சேவை மையத்தின் மூலம் 250 பயனாளிகளுக்கு அட்டை வழங்கினாா்.
இதில், மாவட்டப் பொருளாளா் பொன்னுசாமி, மாநில செயற்குழு உறுப்பினா் மனோகரன், கட்சியின் மூத்த உறுப்பினா்கள், பொறுப்பாளா்கள், பயனாளிகள் கலந்துகொண்டனா்.