ஈரோடு துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் டவுன் மின் பாதையில் உயா் அழுத்த மின் புதைவடம் கம்பிகளை, மின் கம்பங்களின் மேல் பொருத்தும் பணி காரணமாக ஈரோடு நகரில் சில பகுதிகளில் வியாழக்கிழமை (ஜனவரி 9) காலை 10 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: நேதாஜி சாலை, ஆா்.கே.வி.சாலை, ராமசாமி வீதி, வெங்கடாசலம் வீதி, கொங்காலம்மன் கோயில் வீதி, மணிக்கூண்டு, சொக்கநாத வீதி, ஜின்னா வீதி, அக்ரஹாரம் வீதி பகுதிகள்.