ரயில் பாதை பராமரிப்புப் பணி:  ஈரோடு - திருச்சி ரயில் சேவையில் மாற்றம்

ரயில் பாதை பராமரிப்புப் பணி காரணமாக ஈரோடு-கரூர்-திருச்சி ரயில் சேவையில் மே 3, 7 ஆம் தேதிகளில் சில மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  

ரயில் பாதை பராமரிப்புப் பணி காரணமாக ஈரோடு-கரூர்-திருச்சி ரயில் சேவையில் மே 3, 7 ஆம் தேதிகளில் சில மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  
இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஈரோடு-கரூர்-திருச்சி கோட்டை ரயில் நிலையம் இடையே ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதனால் கரூர்-திருச்சி பயணிகள் ரயில், திருச்சி - கரூர் பயணிகள் ரயில் வரும் 7 ஆம் தேதி ரத்து செய்யப்படுகிறது.
மே 3, 7 ஆம் தேதிகளில் சில ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி கோவை -நாகர்கோவில் பயணிகள் விரைவு ரயில் ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் வழியாக திருப்பிவிடப்படும். பாலக்காடு டவுன் - திருச்சி பயணிகள் ரயில் ஈரோடு வரை மட்டுமே இயக்கப்படும்.
திருநெல்வேலி பயணிகள் ரயில் கரூரில் இருந்து புறப்படும். திருச்சி - ஈரோடு பயணிகள் ரயில் ஈரோடு-கரூர் இடையே ரத்து செய்யப்பட்டு கரூரிலிருந்து புறப்படும். ஈரோடு-திருச்சி பயணிகள் ரயில் வரும் 7 ஆம் தேதி ஈரோட்டில் இருந்து கரூர் வரை மட்டுமே இயக்கப்படும்.
திருநெல்வேலி - ஈரோடு பயணிகள் ரயில் 3 ஆம் தேதி திண்டுக்கல் - கரூர் இடையே 1 மணி நேரம் தாமதமாக இயக்கப்படும். ஈரோடு-ஜோலார்பேட்டை பயணிகள் ரயில் ஈரோடு ரயில் நிலையத்தில் இருந்து 30 நிமிடங்கள் தாமதமாகப் புறப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com