பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்துக்குத் தண்ணீர் நிறுத்தம்

பவானிசாகர் அணையிலிருந்து தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை பாசனங்களுக்கு புதன்கிழமை முதல் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.

பவானிசாகர் அணையிலிருந்து தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை பாசனங்களுக்கு புதன்கிழமை முதல் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.
பவானிசாகர் அணையில் திறக்கப்படும் தண்ணீர் கொடிவேரி தடுப்பணையில் தடுத்து தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை பாசனமாக 24,504  ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இரண்டாம் போக சாகுபடிக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 25 ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டது. நீர் நிர்வாக கால அட்டவணைப்படி இரு பாசனங்களுக்கும் புதன்கிழமை பவானிசாகர் அணையில் தண்ணீர் நிறுத்தப்பட்டது. பாசனத்துக்கு தண்ணீர் நிறுத்தும் வரை பவானி ஆற்றில் வெளியேறிய நீர், கொடிவேரி அணைக்கு புதன்கிழமை வந்தது. அந்த தண்ணீர் இரு பாசன வாய்க்காலுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. பின்பு படிப்படியாக தலைமதகு அடைக்கப்பட்டு தண்ணீர் நிறுத்தப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com