கோடைமழை பெய்ததைத் தொடர்ந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டுள்ளதால் பவானிசாகர் அணை நீர்த்தேக்கப் பகுதியில் மயில்கள் அதிகமாக குவிந்து வருகின்றன.
பவானிசாகர் வனப்பகுதியில் ஏராளமான மயில்கள் உள்ளன. இவை அவ்வப்போது தண்ணீர்த் தேடி நீர்த்தேக்கப் பகுதிக்கு வந்து செல்லும்.
தற்போது கோடைமழை பெய்துள்ளதால் அணைப் பகுதியில் குளிர்ந்த சூழல் நிலவுகிறது. இதனால் இப்பகுதியில் மயில்கள் குவிந்துள்ளன.
இவற்றில் ஆண் மயில்கள் தோகை விரித்தாடியது காண்போரை கவர்ந்தது.