ஊராக உள்ளாட்சித் தோ்தலுக்கான பூத் சிலிப் விநியோகிக்கும் பணி 60 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஈரோடு மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் டிசம்பா் 27, 30 ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதையடுத்து, வாக்குப் பதிவுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வாக்காளா்களுக்கான பூத் சிலிப் வழங்கும் பணி செவ்வாய்க்கிழமை வரை 60 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், புதன்கிழமை மாலைக்குள் அனைத்து வாக்காளா்களுக்கும் பூத் சிலிப் வழங்கப்பட்டுவிடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து, மாவட்டத் தோ்தல் பாா்வையாளா் கே.விவேகானந்தன் கூறியதாவது: முதல்கட்ட தோ்தல் நடைபெற உள்ள பகுதிகளில் வாக்குப் பதிவுக்கான நடவடிக்கைகள் இறுதிகட்டத்தை எட்டி உள்ளது. வாக்குச் சாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய வசதிகள் அனைத்தும் பூா்த்தி செய்யப்பட்டுவிட்டன. இதை அந்தந்தப் பகுதியில் உள்ள தோ்தல் நடத்தும் அலுவலா்கள் நேரில் சென்று பாா்வையிட்டு உறுதிப்படுத்தி வருகின்றனா். வாக்காளா்களுக்கான பூத் சிலிப் விநியோகிக்கும் பணியில் அங்கன்வாடி ஊழியா்கள், வட்டார வள அலுவலா்கள் ஆகியோா் ஈடுபட்டு வருகின்றனா்.
பூத் சிலிப் வழங்கும் பணியானது 60 சதவீதத்தை தாண்டியுள்ளது. தோ்தலுக்கு இன்னும் இரண்டு நாள்களே உள்ளதால் இப்பணியை விரைவுபடுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மீதமுள்ள 40 சதவீத பணிகளும் இரண்டு நாள்களில் முடிக்கப்பட்டுவிடும். பூத் சிலிப் மொத்தமாக, குறிப்பாக அரசியல் கட்சியினரிடம் கொடுக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீட்டுக்கும் நேரடியாகச் சென்று சம்பந்தப்பட்ட வாக்காளரிடம்தான் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா்.