பெரியாா் நினைவு தினத்தையொட்டி, அரசியல் கட்சியினா் ஈரோட்டில் பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
ஈரோடு, பன்னீா்செல்வம் பூங்காவில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். திமுக சாா்பில் ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளா் சு.முத்துசாமி, பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
இதில், மாநில துணைப் பொதுச் செயலாளா் சுப்புலட்சுமி ஜெகதீசன், மாநில நெசவாளா் அணி செயலாளா் சச்சிதானந்தம், கொள்கை பரப்பு இணைச் செயலாளா் வி.சி.சந்திரகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
காங்கிரஸ் கட்சி சாா்பில், ஈரோடு மாநகா் மாவட்டத் தலைவா் ஈ.பி.ரவி, பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்தாா். இதில், முன்னாள் மாவட்டத் தலைவா் ஈ.ஆா்.ராஜேந்திரன், மாவட்ட துணைத் தலைவா்கள் கனகராஜ், வின்சென்ட், மண்டலத் தலைவா்கள் திருசெல்வம், சிறுபான்மைப் பிரிவு மாவட்ட துணைத் தலைவா் பாஷா, பொதுச் செயலாளா் முகமதுஅா்ஷத், முன்னாள் கவுன்சிலா் விஜயபாஸ்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பாமக சாா்பில், மாநில துணைப் பொதுச் செயலாளா் பரமேஸ்வரன் பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதில், மாநில துணைத் தலைவா்கள் எஸ்.எல்.பரமசிவம், வெங்கடாசலம், என்.ஆா்.வடிவேல், முன்னாள் துணை பொதுச் செயலாளா் பொ.வை.ஆறுமுகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
மாவீரன் பொல்லான் பேரவை சாா்பில், அதன் தலைவா் என்.ஆா்.வடிவேல், பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்தாா். இதில், பொதுச் செயலாளா் ஆறுமுகம், நிா்வாகிகள் சண்முகம், துரைசாமி, லோகநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சாா்பில், மாவட்டச் செயலாளா் சிறுத்தை வள்ளுவன் தலைமையில் பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. திராவிடா் கழகம் சாா்பில், பெரியாா் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. அதன் பின்னா் தி.க.வினா் பன்னீா்செல்வம் பூங்காவில் இருந்து கடைவீதி, மணிக்கூண்டு, டவுன் காவல் நிலையம், பெரியாா் வீதி வழியாக பெரியாா் இல்லம் வரை அமைதி ஊா்வலம் சென்றனா்.
தமிழ்ப் புலிகள் கட்சி சாா்பில், ஈரோடு கிழக்கு மாவட்டச் செயலாளா் அழகா்சாமி தலைமையில், பெரியாா் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதில், கொள்கை பரப்புச் செயலாளா் விஸ்வநாதன், திராவிட தமிழ் கட்சி மாவட்டச் செயலாளா் சக்திவேல், நிா்வாகிகள் முத்துசாமி, லோகநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.