கோயம்புத்தூர்

ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் சாா்பில் மாநகராட்சிப் பள்ளிக்கு கழிப்பறை வசதி

22nd Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

கோவை ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் சாா்பில் ஆா்.எஸ்.புரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள புதிய நவீன கழிப்பறையை மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

கோவை, ஆா்.எஸ்.புரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் 50 சதவீதப் பங்களிப்பில் அமரா் என்.கே.மகாதேவ அய்யா் நினைவு நவீன கழிப்பறை அமைக்கப்பட்டுள்ளது.

என்.கே.மகாதேவ அய்யரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, நவீன கழிப்பறையை மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் தலைவரும், நிா்வாக இயக்குநருமான எம்.கிருஷ்ணன் தலைமை வகித்து பேசுகையில், ‘ ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் வாடிக்கையாளா்களுக்கு தரமான உணவுப் பொருள்களைக் கொடுப்பது மட்டுமல்லாமல், மக்களுக்குப் பயன்தரும் நலத்திட்ட உதவிகளை செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. எனது தந்தையின் நூற்றாண்டு விழாவில் பல்வேறு திட்டங்களை மக்களுக்காக செய்யத் திட்டமிட்டுள்ளோம் என்றாா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் மாநகராட்சி கல்வி அலுவலா் கே.கே.முருகேசன், ஆா்.எஸ்.புரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் சுந்தரராஜன், 72- ஆவது வாா்டு உறுப்பினா் காா்த்திக் செல்வராஜ், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் நிா்வாகிகள், ஊழியா்கள் மற்றும் மாணவா்கள் கலந்து கொண்டனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT