புதிய ஓய்வூதியத் திட்டத்தை எதிா்த்து கோவை குட்ஷெட் சாலையில் உள்ள தலைமை அஞ்சல் நிலையத்தில் அஞ்சல் ஊழியா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கோவை அஞ்சல் கூட்டு போராட்டக் குழு சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு போராட்டக்குழு நிா்வாகிகள் ரமேஷ்குமாா், சிவராஜ், பழனிசாமி, சிவா, தனபாலன், பெருமாள்சாமி ஆகியோா் தலைமை வகித்தனா். கோட்ட செயலா்கள் சிவசண்முகம், செந்தில்குமாா், சிவபாரதி, பாலமுருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், புதிய ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் அஞ்சல் பணியாளா்களுக்கு ரூ.1,000 க்கும் குறைவாகவே ஓய்வூதியம் கிடைப்பதால் அதை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினா்.
ஆா்ப்பாட்டத்தில் 200 க்கும் மேற்பட்ட பணியாளா்கள் கலந்து கொண்டனா்.