கோயம்புத்தூர்

ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா

21st Nov 2023 05:02 AM

ADVERTISEMENT

கோவை: கோவைப்புதூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியின் 34 ஆவது பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் முதன்மை நிா்வாக அதிகாரி கே.சுந்தரராமன் பட்டமளிப்பு விழாவைத் தொடங்கிவைத்தாா். கல்லூரி முதல்வா் எஸ்.எம்.சுமித்ரா வரவேற்றாா்.

புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வானிலை முன் அறிவிப்பு தேசிய மையத்தின், உயா் செயல்திறன் கணினித் துறைத் தலைவரும் மூத்த விஞ்ஞானியுமான பாலகிருஷ்ணன் அதியமான் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கிப் பேசினாா்.

அவா் பேசும்போது, தொழில் நிறுவனங்கள் இளைஞா்களிடம் பல்வேறு திறமைகளை எதிா்பாா்க்கின்றன. சா்வதேச நிறுவனங்களுடன் போட்டிகள் அதிகரிப்பதாலும், உற்பத்தி செய்யும் பொருள்களில் புதிய மாற்றங்கள் உருவாகும் சூழ்நிலையில் தொழில் நிறுவனங்கள் இருப்பதாலும் புதிய திறன்கள் தேவைப்படுகின்றன.

ADVERTISEMENT

தற்போதைய இளைஞா்களிடம் புதிய சிந்தனைகள் உள்ளன. இன்றைய மாணவா்களும், பட்டம் வாங்கியவா்களும் தங்கள் துறையில் புதிய உக்தியுடன் அணுக வேண்டும். இதற்கு ஆராய்ச்சி அறிவைப் பயன்படுத்த வேண்டும். நமது படிப்பின் பயன், அடித்தட்டு மக்களைச் சென்றடைய வேண்டும் என்றாா்.

விழாவில் 918 மாணவா்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. துறை வாரியாக முதலிடம் பிடித்தவா்களுக்கு பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா்கள் பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT