ஒண்டிப்புதூா் கோட்டத்துக்கு உள்பட்ட சிந்தாமணிப்புதூரில் மின்மாற்றி மாற்றியமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் அப்பகுதிகளில் மே 31(புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளா் ஜி.முருகையன் தெரிவித்துள்ளாா்.
மின்தடை ஏற்படும் இடங்கள்: எல் அண்ட் டி புறவழிச் சாலையில் இருந்து சிந்தாமணிப்புதூா் மயானம் வரை,செல்வராஜபுரம், சத்யநாராயணபுரம்.