கோயம்புத்தூர்

போலீஸாருக்கு ரோந்து ஆட்டோ

DIN

கோவையில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபடுவதற்கு வசதியாக 2 ஆட்டோக்கள் வழங்கப்பட்டுள்ளன.

வழக்கமாக போலீஸாரின் ரோந்துப் பணிகளுக்கு ஜீப், காா், மோட்டாா் சைக்கிள் போன்ற வாகனங்களே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தேசிய அளவில் முதல்முறையாக, கோவை மாநகர போலீஸாருக்கு மின்சாரத்தில் இயங்கக் கூடிய சிவப்பு நிறத்திலான 2 ரோந்து ஆட்டோக்கள் வழங்கப்பட்டுள்ளன.

இவற்றில் எச்சரிக்கை ஒலிபெருக்கியுடன் சிவப்பு மற்றும் நீல விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த ரோந்து ஆட்டோவின் நான்கு புறமும் போக்குவரத்து போலீஸாரின் தொலைபேசி மற்றும் அவசர உதவி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

அத்துடன் இந்த ஆட்டோக்களில் பொருள்களை ஏற்றிச் செல்லும் வசதியும் உள்ளது. கோவை மாநகரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த மின்சார ரோந்து ஆட்டோக்கள் விரைவில் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரித்த சர்க்கரை அளவு: கேஜரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது!

உடல்கூறாய்வு அறிக்கை: 14 முறை குத்தப்பட்டு 58 வினாடிகளில் பலியான மாணவி நேஹா

தண்டனையை நிறுத்திவைக்கக் கோரிய ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி

திருமண மகிழ்ச்சியில் அபர்ணா தாஸ்!

பள்ளத்தில் சிக்கிய கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேர்!

SCROLL FOR NEXT