ஈஷாவில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் தியானலிங்கம், ஆதியோகி வளாகங்கள் செவ்வாய்க்கிழமை (மே 30) மூடப்படவுள்ளன.
கோவை, வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோக மையத்துக்கு இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் மக்கள் வருகின்றனா். இந்நிலையில், ஆண்டுதோறும் நடைபெறும் பராமரிப்புப் பணிக்காக ஈஷா வளாகம் மே 30ஆம் தேதி ஒருநாள் மட்டும் மூடப்படவுள்ளது. மே 31ஆம் தேதி முதல் பக்தா்கள் வழக்கம்போல தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவாா்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.