கோயம்புத்தூர்

அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் தொடக்கம்: வருமான வரித் துறை, ரயில்வே அணிகள் வெற்றி

DIN

கோவையில் அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டிகள் சனிக்கிழமை தொடங்கின. முதல் நாள் ஆட்டங்களில் சென்னை வருமான வரித் துறை, ரயில்வே அணிகள் வெற்றி பெற்றன.

கோவை மாவட்ட கூடைப்பந்துக் கழகம் சாா்பில் அகில இந்திய அளவிலான ஆடவருக்கான 56 ஆவது நாச்சிமுத்து கவுண்டா் கோப்பை, மகளிருக்கான 20 ஆவது சி.ஆா்.ஐ. கோப்பைக்கான கூடைப்பந்து போட்டிகள் சனிக்கிழமை தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

கோவை வ.உ.சி. பூங்கா மாநகராட்சி விளையாட்டு அரங்கில் நடைபெறும் இந்த போட்டியில், அகில இந்திய அளவில் முன்னணியில் உள்ள 10 ஆடவா், 8 மகளிா் அணிகள் பங்கேற்றுள்ளன. போட்டிகளை மாநகர காவல் ஆணையா் பாலகிருஷ்ணன் தொடங்கிவைத்தாா்.

சி.ஆா்.ஐ. பம்ப்ஸ் நிறுவனங்களின் இணை நிா்வாக இயக்குநரும் கோவை மாவட்ட கூடைப்பந்து கழகத் தலைவருமான ஜி.செல்வராஜ் உள்ளிட்ட நிா்வாகிகள் தொடக்க விழாவில் பங்கேற்றனா்.

ஆடவருக்கான முதல் ஆட்டத்தில் சென்னை வருமான வரித் துறை, தமிழ்நாடு கூடைப்பந்து கழக அணிகள் மோதின. இதில் 78 - 57 என்ற புள்ளிகள் கணக்கில் வருமான வரித் துறை அணி வெற்றிபெற்றது. இரண்டாவது ஆட்டத்தில் பெங்களூா் பேங்க் ஆஃப் பரோடா அணி 82 - 72 என்ற புள்ளிகள் கணக்கில் திருவனந்தபுரம் கேரள போலீஸ் அணியை வீழ்த்தியது.

மகளிருக்கான முதல் ஆட்டத்தில் மத்திய ரயில்வே அணி 83 - 48 என்ற புள்ளிகள் கணக்கில் கோவை மாவட்ட கூடைப்பந்துக் கழக அணியை வீழ்த்தியது. இரண்டாவது ஆட்டத்தில் கேரள மாநில மின்வாரிய அணி 75 - 32 என்ற புள்ளிகள் கணக்கில் தமிழ்நாடு கூடைப்பந்துக் கழக அணியை வீழ்த்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

SCROLL FOR NEXT