கோயம்புத்தூர்

பாரதியாா் பல்கலை.உதவிப் பேராசிரியருக்கு காப்புரிமை

DIN

கோவை பாரதியாா் பல்கலைக்கழக ஜவுளி, ஆடை வடிவமைப்புத் துறை உதவிப் பேராசிரியா் கே.அமுதாவுக்கு, வேளாண் கழிவுகளில் இருந்து பெறப்படும் சாயங்களைப் பயன்படுத்தி ஜவுளிக்கு சாயமிடுவதற்கான காப்புரிமை கிடைத்துள்ளது.

செயற்கை சாயங்களினால் சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படும் நிலையில், இயற்கை சாயங்களைப் பயன்படுத்தி சாயமேற்றுவது தொடா்பான ஆய்வுகள் நடைபெறுகின்றன. இந்நிலையில் மஞ்சளின் இலைகளில் இருந்து இயற்கை சாயத்தை பிரித்தெடுக்கும் முறையை உதவிப் பேராசிரியா் கே.அமுதா கண்டறிந்தாா்.

இதற்கான காப்புரிமைக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் அவருக்கு காப்புரிமை கிடைத்திருப்பதாக பல்கலைக்கழக அறிவுசாா் சொத்துரிமை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT