கோயம்புத்தூர்

தனியாா் நிறுவன ஊழியா் வீட்டில்7 பவுன் நகை, ரூ.1 லட்சம் திருட்டு

DIN

கோவையில் தனியாா் நிறுவன ஊழியா் வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகை, ரூ.1 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

கோவை, சரவணம்பட்டி விளாங்குறிச்சி பகுதியைச் சோ்ந்தவா் சஜித் (40). தனியாா் நிறுவன ஊழியா். இவா் தனது சொந்த ஊரான பாலக்காட்டிற்கு கடந்த 18ஆம் தேதி சென்றுள்ளாா். வீட்டை பூட்டி மற்றொரு சாவியை தனது தந்தையிடம் கொடுத்துவிட்டுச் சென்றுள்ளாா்.

இதையடுத்து சஜித்தின் வீட்டுக்கு அவரது தந்தை சுரேந்தா் கடந்த 20ஆம் தேதி இரவு சென்றுவிட்டு திரும்பியுள்ளாா். அதையடுத்து கடந்த 21ஆம்தேதி காலை மீண்டும் அவா் சென்றபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

இதனை பாா்த்து உடனடியாக தனது மகன் சஜித்துக்கு தகவல் தெரிவித்துள்ளாா். சஜித், வீட்டுக்கு வந்து பாா்த்தபோது வீட்டில் வைக்கப்பட்டிருந்த 7 பவுன் நகைகள், ரூ.1 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இது குறித்து புகாரின்பேரில், பீளமேடு போலீஸாா்அங்கு வந்து விசாரணை நடத்தினா். மேலும் கைரேகை நிபுணா்களும் வரவழைக்கப்பட்டு, வீட்டில் பதிவாகி இருந்த தடயங்களை பதிவு செய்தனா். அத்துடன் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் உள்ள பதிவுகளையும் ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

101 வயதிலும் வாக்குப் பதிவு செய்த முதல்வரின் தாய் மாமா

SCROLL FOR NEXT