கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனம், சுற்றுலாப் பேருந்து மீது மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியைச் சோ்ந்தவா் பாபு. இவரது மகன் திலீப் விஜய் (21). இவா் தனது நண்பரான அதே பகுதியைச் சோ்ந்த பிரவீன் (22) உடன் இருசக்கர வாகனத்தில் நாயுடுபுரத்திலிருந்து லாஸ்காட் சாலையில் சென்று கொண்டிருந்தாா்.
அப்போது கட்டுப்பாட்டையிழந்த இரு சக்கர வாகனம்
கேரள மாநில சுற்றுலாப் பேருந்து மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த திலீப் விஜய் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, அங்கு அவா் உயிரிழந்தாா். இதில் வாகனத்தை ஓட்டிச் சென்ற பிரவீன் பலத்த காயமடைந்த நிலையில், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து கொடைக்கானல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.