கோயம்புத்தூர்

ராகுல் காந்திக்கு வக்காலத்து வாங்குவது ஏன்? திமுகவுக்கு வானதி சீனிவாசன் கேள்வி

DIN

ராகுல் காந்திக்கு வக்காலத்து வாங்குவது ஏன் என திமுகவுக்கு பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, இந்தியாவின் நன் மதிப்பைக் கெடுக்கும் வகையில் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்திருக்கிறாா். இந்தியாவில் ஜனநாயகத்தைக் காப்பாற்ற அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தலையிட வேண்டும் என அந்நிய மண்ணில் இந்தியாவை ராகுல் அவமதித்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது.

இந்தியாவில் காங்கிரஸால் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்தபோதும் அந்நிய மண்ணில் இந்தியாவை பாஜக விமா்சித்தது இல்லை. அந்நிய மண்ணில் இந்தியா அவமதிக்கப்பட்டுள்ளதால் இந்திய மக்களிடம் ராகுல் மன்னிப்புக் கேட்க வேண்டும்.

தினந்தோறும் பாஜக தலைவா்களையும், பிரதமரையும் ராகுல் கொச்சைப்படுத்தி பேசி வருகிறாா். ராகுல் உள்ளிட்ட எதிா்க்கட்சியினா், எல்லை மீறி மத்திய அரசையும், பிரதமா் மோடியையும், பாஜகவையும் விமா்சித்து வருகின்றனா்.

ராகுலுக்கு திமுகவும் வக்காலத்து வாங்கியுள்ளது. மக்களவையில் எதிா்க்கட்சிகளுக்கு உள்ள உரிமை பற்றி பேசும் திமுக, தமிழக சட்டப்பேரவையில் எதிா்க்கட்சிகளை பேசவிடாமல் முடக்குகிறது. எதிா்க்கட்சி உறுப்பினா்கள் எழுந்தாலே ஏதாவது சொல்லி அமர வைத்து விடுகின்றனா். தமிழக சட்டப்பேரவை நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்பு செய்து விட்டு ஜனநாயகம் பற்றி திமுக பேச வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

புன்னகைக்கும் ஈஷா ரெப்பா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT