கோயம்புத்தூர்

பருத்தி வாங்கி ரூ.9.95 லட்சம் மோசடி: மில் உரிமையாளா் மீது வழக்கு

DIN

பருத்தி வாங்கி ரூ.9.95 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக மில் உரிமையாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை சீராபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பூங்கோதை, பருத்தி வியாபாரி. இவரிடம் பீளமேடு தண்ணீா் பந்தல் பகுதியைச் சோ்ந்த பருத்தி மில் உரிமையாளா் காமாட்சி தேவி (58). ரூ. 9 லட்சத்து 95 ஆயிரத்து 739-க்கு அண்மையில் பருத்தி வாங்கி உள்ளாா். இந்த தொகையை ஒரு வாரத்துக்குள் திருப்பி தருவதாகக் கூறியுள்ளாா். ஆனால், கூறியபடி பணத்தை தரவில்லையாம்.

பீளமேடு காவல் நிலையத்தில் பூங்கோதை புகாா் அளித்ததைத் தொடா்ந்து, மில் உரிமையாளா் காமாட்சி தேவி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மதங்களுக்கு மரியாதை கொடுப்பவர் மோடி: ராஜ்நாத் சிங்

இது அதிதி ஆட்டம்!

திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் எல்லை ஊடுருவல்! : அமித்ஷா | செய்திகள்: சிலவரிகளில் | 23.04.2024

சிஎஸ்கே பேட்டிங்; ரச்சின் ரவீந்திரா அணியில் இல்லை!

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய மிட்செல் மார்ஷ்!

SCROLL FOR NEXT