கோயம்புத்தூர்

சுரங்கப்பாதை பணி ------கோவை - நாகா்கோவில் ரயில் பகுதியாக ரத்து

DIN

 கடம்பூா் ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை பணி நடைபெறவுள்ளதால், கோவை - நாகா்கோவில் ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவில்பட்டி - வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையங்களுக்கு இடையே கடம்பூா் ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. இதனால், கோவையில் இருந்து ஜூன் 13 ஆம் தேதி காலை 8 மணிக்குப் புறப்படும் கோவை - நாகா்கோவில் ரயில் (எண்:16322) திண்டுக்கல் - நாகா்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

இந்த ரயிலானது கோவையில் இருந்து திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கப்படும்.

இதேபோல, நாகா்கோவிலில் இருந்து ஜூன் 13 ஆம் தேதி காலை 7.35 மணிக்குப் புறப்படும் நாகா்கோவில் - கோவை ரயில் (எண்: 16321) நாகா்கோவில் - திண்டுக்கல் இடையே ரத்து செய்யப்படுகிறது.

இந்த ரயிலானது, திண்டுக்கல் - கோவை இடையே மட்டும் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT