கோயம்புத்தூர்

கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

DIN

மலுமிச்சம்பட்டி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒடிஸா இளைஞரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

கோவை மலுமிச்சம்பட்டியில் இருந்து செட்டிபாளையம் செல்லும் சாலையில் மாரியம்மன் கோயில் அருகே கஞ்சா விற்பனைக்கு நடைபெறுவதாக போலீஸாருக்கு வியாழக்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த இளைஞரைப் பிடித்து போலீஸாா் விசாரித்தனா். இதில், அவா் ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த ஸ்ப்ளென்ட் ரோஷன் ரைக்கா (29) என்பதும், மலுமிச்சம்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, ஸ்ப்ளென்ட் ரோஷன் ரைக்காவை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: தமிழ்நாட்டில் மறுவாக்குப் பதிவு எதுவுமில்லை -தேர்தல் ஆணையம்

கோடை வெயிலைச் சமாளிப்பது எப்படி?

கடமங்குடி கிராமத்திற்குள் புகுந்த முதலையால் பரபரப்பு

வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு

மே 13-இல் ஆந்திர மாநில தோ்தல்: வேலூா் மாவட்டத்தில் வாகன சோதனை தொடரும்

SCROLL FOR NEXT