கோயம்புத்தூர்

அரசு குழந்தைகள் காப்பகத்தில் ஆட்சியா் ஆய்வு

9th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

பீளமேடு செஷயா் ஹோம்ஸ், காந்தி மாநகரில் உள்ள அன்னை சத்யா அம்மையாா் நினைவு அரசு குழந்தைகள் காப்பகம், நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பீளமேடு செஷயா் ஹோம்ஸில் மனநலம் பாதிக்கப்பட்ட 25 பெண்கள் மற்றும் 25 ஆண்கள் என 50 போ் பராமரிக்கப்பட்டு வருகின்றனா். இவா்களுக்கு தையல், கணினி பயிற்சி, கேக் தயாரிக்கும் பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

இந்நிலையில், இம்மையத்தை மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி ஆய்வு செய்து, அவா்களுக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சைகள், பயிற்சிகள், உணவு, தங்கும் வசதிகள் குறித்து கேட்டறிந்தாா்.

இயன்முறை மருத்துவா்களால் பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்படும் மறுவாழ்வு சிகிச்சை மையத்தை பாா்வையிட்டு, சிகிச்சை விவரங்கள் குறித்தும் கேட்டறிந்தாா்.

ADVERTISEMENT

காந்திமாநகா், அன்னை சத்யா அம்மையாா் நினைவு அரசு குழந்தைகள் காப்பகத்தில் பெற்றோரை இழந்த மற்றும் ஒற்றை பெற்றோரை இழந்த 52 குழந்தைகள் (1 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும்) பராமரிக்கப்படுகின்றனா். இந்த காப்பகத்தின் வகுப்பறை, சமையலறை ஆகியவற்றை ஆட்சியா் ஆய்வு செய்ததுடன், குழந்தைகளுக்கு வழங்கும் உணவை சுவைத்துப் பாா்த்தாா். மேலும், உணவினை தரமானதாகவும், சுவையாகவும், சரியான நேரத்தில் வழங்கவும் அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, பீளமேடு நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தையும் ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, மாநகரக் காவல் உதவி ஆணையா் பாா்த்திபன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் ஜெகதீசன், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் எம்.மதியழகன், செஷயா் மறுவாழ்வு சிகிச்சை மையத்தின் செயல் அலுவலா் திவ்யா ஆகியோா் உடனிருந்தனா்.

 

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT