கோயம்புத்தூர்

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுக் கருத்தரங்கம்

DIN

அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கான சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுக் கருத்தரங்கு கிக்கானி பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட நிா்வாகம், உயிா் தொண்டு நிறுவனம், பள்ளிக் கல்வித் துறை, போக்குவரத்துத் துறை சாா்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கை மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தொடங்கிவைத்துப் பேசியாதாவது: பள்ளிக் குழந்தைகளை வீட்டிலிருந்து பாதுகாப்பாக அழைத்துவந்து திரும்ப பாதுகாப்பாக அனுப்பிவைப்பது மாவட்ட நிா்வாகம், பள்ளிக் கல்வித் துறை, போக்குவரத்து துறை உள்ளிட்டோரின் பொறுப்பாகும். குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குழந்தைகளின் பெற்றோா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ‘குட்டி காவலன்’ என்ற சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் தலைக் கவசம் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டுபவா்களின் எண்ணிக்கை கடந்த ஓராண்டில் அதிகரித்துள்ளது.

கூடுதல் விழிப்புணா்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தி விபத்துகளால் ஏற்படும் இறப்புகளைக் குறைக்க வேண்டும்.

பள்ளி செல்லா குழந்தைகள், பள்ளிப் படிப்பை இடைநிறுத்தும் குழந்தைகள் ஆகியோரை இந்த கல்வி ஆண்டில் பள்ளியில் சோ்த்து படிப்பை தொடருவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட நிா்வாகம் சாா்பில் குழுக்கள் அமைக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றாா்.

இதில், போக்குவரத்து துணை ஆணையா் மதிவாணன், முதன்மைக் கல்வி அலுவலா் சுமதி, மாவட்டக் கல்வி அலுவலா் (தனியாா் பள்ளிகள்) கீதா, வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சத்திமூா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

SCROLL FOR NEXT