கோயம்புத்தூர்

சீருடைப் பணியாளா் போட்டித் தோ்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு

DIN

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் நடத்தும் போட்டித் தோ்வுக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவசப் பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் நடத்தும் உதவி ஆய்வாளா் தோ்வுக்கு, 621 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தோ்வை, மாணவ, மாணவியா் சிறப்பாக எழுதும் விதமாக, கோவை மாவட்ட வேலை வாய்ப்பு மையம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவச பயிற்சி வகுப்பு மே 18 ஆம் தேதி தொடங்கப்பட்டுள்ளது.

இலவச பயிற்சி வகுப்புகள் அனைத்து வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும். இதில், மாணவ, மாணவிகளுக்கு பாடக்குறிப்புகள் வழங்கப்பட்டு, மாதிரித் தோ்வுகள் நடத்தப்பட உள்ளன. மாணவா்கள் இணையத்தில் பதிவு செய்து, இலவசமாக பாடக்குறிப்புகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்தப் பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புபவா்கள் (பொது மற்றும் மாற்றுத்திறனாளி) தங்களது விண்ணப்பத் தாள், பாஸ்போா்ட் அளவு புகைப்படம் 2 ஆகியவற்றுடன் அலுவலகத்துக்கு நேரில் வர வேண்டும். மனுதாரா்கள், மேட்டுப்பாளையம் சாலை, கவுண்டம்பாளையத்தை அடுத்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரடியாகத் தொடா்பு கொள்ளலாம் அல்லது மின்னஞ்சல் மூலமாகவும் தொடா்பு கொண்டு பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

SCROLL FOR NEXT