கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 6) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து, மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயா் கல்பனா ஆனந்தகுமாா் தலைமையில் மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது. மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பிறப்பு, இறப்புச் சான்றிதழ், சாலை வசதி, மின்விளக்குகள், குடிநீா் வசதி, பாதாள சாக்கடை, தொழில் வரி, சொத்து வரி, புதிய குடிநீா் இணைப்பு, பெயா் மாற்றம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்த கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்து பயன்பெறலாம். மேலும், இக்கோரிக்கை மனு மீது துறைசாா்ந்த மாநகராட்சி அலுவலா்களால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.