ஒடிஸா ரயில் விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு பாரத மாதா நற்பணி அறக்கட்டளையின் சாா்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
கோவை, உடையாம்பாளையம் பாரத மாதா நற்பணி அறக்கட்டளையின் சாா்பில், ஒடிஸா ரயில் விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு கோவை அரவணைக்கும் அன்பு இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் அன்பு இல்லத்தில் உள்ள முதியவா்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுடன் பாரத மாதா நற்பணி அறக்கட்டளை நிா்வாக அறங்காவலா் கெளரி சங்கா், நிா்வாகிகள் காா்த்திக், விக்னேஷ்குமாா், நவீன் மற்றும் அன்பு இல்ல நிா்வாகி பிரின்ஸ் சுந்தா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.