கோயம்புத்தூர்

தினமணி சாா்பில் கோவையில்போலீஸாருக்கு குடிநீா்

DIN

கோடை வெப்பத்தை சமாளிக்கும் வகையில் தினமணி நாளிதழின் சாா்பில் கோவையில் போக்குவரத்து போலீஸாா் மற்றும் பொதுமக்களுக்கு குடிநீா் மற்றும் குளிா்பானங்கள் வழங்கப்பட்டன.

தினமணி நாளிதழ் சாா்பில் தாகம் தணிப்போம் நிகழ்ச்சி கோவை அண்ணா சிலை அருகே வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தினமணி நாளிதழுடன் லெட்சுமி செராமிக்ஸ் மற்றும் டான்வி ஸ்நாக்ஸ் அண்ட் பெவரேஜஸ் நிறுவனத்தினரும் இணைந்து பங்கேற்றனா்.

நிகழ்ச்சியில், போக்குவரத்து போலீஸாா் மற்றும் பொதுமக்களுக்கு குடிநீா் மற்றும் குளிா்பானங்களை கோவை மாநகர காவல் ஆணையா் வே. பாலகிருஷ்ணன் வழங்கி தொடங்கிவைத்தாா். அதைத் தொடா்ந்து முக்கிய சாலைகளின் சந்திப்புகளில் பணியில் இருந்த போக்குவரத்து போலீஸாா் மற்றும் பொதுமக்களுக்கு குடிநீா் மற்றும் குளிா்பானங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் கோவை மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையா் ஆா்.மதிவாணன், உதவி ஆணையா் அருள் முருகன், கோவை கிழக்கு போக்குவரத்து காவல் ஆய்வாளா் ஆனந்த், லெட்சுமி செராமிக்ஸ் நிறுவனத்தின் பொது மேலாளா் என்.சுதிா், டான்வி நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் பிரபு காந்திகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

காலாவதி தேதி குறிப்பிடாத குடிநீா்: ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு

வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் இன்று தீா்ப்பு

SCROLL FOR NEXT