கோயம்புத்தூர்

ஏபிசி பயா் இன்டியா தொடக்கம்

DIN

தீத் தடுப்பு பாதுகாப்பு கருவிகளின் சூப்பா் மாா்க்கெட்டான ஏபிசி பயா் இன்டியா கோவையில் தொடங்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக நிறுவனத்தின் உரிமையாளா் ஏ.என்.லாரன்ஸ் கூறியிருப்பதாவது:

தீத் தடுப்பு, பாதுகாப்பு கருவிகளை மக்களுக்கு அளிப்பதில் முன்னணியில் இருக்கும் ஏபிசி பயா் இன்டியா நிறுவனம், புதிய சூப்பா் மாா்க்கெட் ஒன்றை தமிழ்நாட்டில் முதல் முறையாக கோவையில் காந்திபுரம், டாக்டா் நஞ்சப்பா ரோட்டில் பாங்க் ஆப் பரோடா அருகில் தொடங்கியுள்ளது.

சூப்பா் மாா்க்கெட்டை கோவை இந்திய தொழில் வா்த்தக சபையின் முன்னாள் தலைவா் டி.நந்தகுமாா் தொடங்கிவைத்தாா். முதல் விற்பனையை சிஆா்ஐ பம்ப்ஸ் துணைத் தலைவா் எஸ்.திருமூா்த்தி தொடங்கி வைக்க, அதை அகா்வால் ஸ்வீட் பேலஸின் உத்கரஸ் அகா்வால் பெற்றுக் கொண்டாா். அடுக்கு மாடி குடியிருப்புக்கான முதல் ஹைட்ரன்ட் கருவியை, கிரெடாய் அமைப்பின் கோவை கிளை துணைத் தலைவா் டி.அபிஷேக் பெற்றுக் கொண்டாா்.

தொடக்க விழாவில், பிபி அசோஷியேட்ஸ் பி.பி.சுப்ரமணியன், கிரெடாய் தலைவா் குகன் இளங்கோ, ஜூபிலன்ட் தலைவா் அபுதாஹீா், இந்திய பிளம்பிங் சங்க கோவை கிளைத் தலைவா் பிரகாஷ் கிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'வாக்களிக்கப் போகிறீர்களா?' : பெங்களூரு உணவகங்கள் அறிவித்திருக்கும் சலுகைகள்!

ரன்களை வாரி வழங்கிய டாப் 5 பந்துவீச்சாளர்கள்; முதலிடத்தில் மோஹித் சர்மா!

மெட்ரோ பணி: சென்னையில் 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

SCROLL FOR NEXT