கோவை மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு புதிய ஆட்சியராக திருப்பூா் மாநகராட்சி ஆணையா் கிராந்தி குமாா் பாடி நியமிக்கப்பட்டுள்ளாா்.
கோவை மாவட்டத்தின் 182 ஆவது ஆட்சியராக மருத்துவா் ஜி.எஸ்.சமீரன் கடந்த 2021 ஜூன் 16 ஆம் தேதி பதவியேற்றாா். கரோனா நோய்த் தொற்றின் 2 ஆவது அலை தீவிரமாக இருந்த காலகட்டத்தில் பதவியேற்றாா் ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன். இவரின் நடவடிக்கையால் கோவையில் கரோனா நோய்த் தொற்று குறையத் தொடங்கியது.
இந்நிலையில் ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் சென்னை மாநகராட்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். இவருக்கு பதிலாக கோவையின் புதிய ஆட்சியராக திருப்பூா் மாநகராட்சி ஆணையராகப் பணியாற்றி வந்த கிராந்தி குமாா் பாடி நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.