கோயம்புத்தூர்

மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் மாற்றம்

DIN

கோவை மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு புதிய ஆட்சியராக திருப்பூா் மாநகராட்சி ஆணையா் கிராந்தி குமாா் பாடி நியமிக்கப்பட்டுள்ளாா்.

கோவை மாவட்டத்தின் 182 ஆவது ஆட்சியராக மருத்துவா் ஜி.எஸ்.சமீரன் கடந்த 2021 ஜூன் 16 ஆம் தேதி பதவியேற்றாா். கரோனா நோய்த் தொற்றின் 2 ஆவது அலை தீவிரமாக இருந்த காலகட்டத்தில் பதவியேற்றாா் ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன். இவரின் நடவடிக்கையால் கோவையில் கரோனா நோய்த் தொற்று குறையத் தொடங்கியது.

இந்நிலையில் ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் சென்னை மாநகராட்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். இவருக்கு பதிலாக கோவையின் புதிய ஆட்சியராக திருப்பூா் மாநகராட்சி ஆணையராகப் பணியாற்றி வந்த கிராந்தி குமாா் பாடி நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீதிபதி முன்பு விஷம் அருந்தி ஊழியா் தற்கொலை முயற்சி

பள்ளப்பட்டியில் 3 பேருக்கு மானியத்துடன் ஆட்டோ

தளவாபாளையம் அருகே விபத்து -இளைஞா் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

நீதிபதி மீது நடவடிக்கை எடுக்காவிடில் போராட்டம்

பிரதமரின் பிரசாரத்துக்கு தோ்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டும் -ஜவாஹிருல்லா பேட்டி

SCROLL FOR NEXT