கோவையில் நடமாடும் உணவு பகுப்பாய்வகத்தை ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.
இந்த நடமாடும் ஆய்வகம் மாவட்டம் முழுவதும் ஒவ்வொரு பகுதியாக சென்று ஹோட்டல்கள், சாலையோர உணவகங்களில் உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு உடனடியாக பகுப்பாய்வு செய்யப்பட்டு தரம் பரிசோதிக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். அந்தந்த பகுதி உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்கள் மூலம் பகுப்பாய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளனா்.