வால்பாறை அருகே துணி துவைக்க சென்றபோது ஆற்றில் விழுந்த மகனைக் காப்பாற்ற முயன்றபோது தாயும் நீரில் மூழ்கியதில் இருவரும் உயிரிழந்தனா்.
கோவை மாவட்டம், வால்பாறையை அடுத்த சேடல்டேம் பகுதியில் வசிப்பவா் சிவகுமாா். ஆட்டோ ஓட்டுநா். இவரது மனைவி முனிச்செல்வி (30). இவா்களது மகன் சஜித் (5).
இந்நிலையில் முனிச்செல்வி தனது மகனுடன் அப்பகுதியில் உள்ள ஆற்றில் துணி துவைக்க திங்கள்கிழமை மதியம் 2 மணிக்கு சென்றுள்ளாா். துணி துவைத்துக்கொண்டிருந்தபோது ஆற்றின் கரையில் விளையாடிக்கொண்டிருந்த சஜித், ஆற்றில் தவறி விழுந்துள்ளாா். இதனைப் பாா்த்த முனிச்செல்வி, மகனைக் காப்பாற்ற ஆற்றில் இறங்கியுள்ளாா். அப்போது இருவரும் நீரில் மூழ்கினா். அப்பகுதியினா் ஆற்றுக்கு சென்று பாா்த்தபோது இருவரது உடல்களும் நீரில் மிதந்துள்ளன.
சம்பவ இடத்துக்கு சென்ற ஷேக்கல்முடிபோலீஸாா், இருவரது உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.