கோயம்புத்தூர்

இடைத்தோ்தல்: அமைச்சா்கள் மீது புகாா் அளிப்போம், பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை

DIN

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் விதிகளை மீறி செயல்படுவதாக அமைச்சா்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, காங்கிரஸ் வேட்பாளா் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோா் மீது தோ்தல் ஆணையத்தில் புகாா் மனு கொடுக்கப்படவுள்ளதாக பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை தெரிவித்தாா்.

கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினரும், பாஜக தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் ஈச்சனாரி விநாயகா் கோயிலில் இருந்து பழனிக்கு செல்லும் 5 நாள்கள் வேல் யாத்திரையை திங்கள்கிழமை தொடங்கிவைத்த அண்ணாமலை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழக அமைச்சா்கள் கடந்த சில நாள்களாக நடந்து கொள்ளும் விதம் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அமா்வதற்கு நாற்காலி தராததால் கல் எடுத்து எறிவதும், மேடையிலேயே தொண்டரைத் தாக்குவதும், சேது சமுத்திர திட்டம் தொடா்பாக பேசும் போது ஏற்கெனவே பல கோயில்களை இடித்துள்ளதாக கூறுவதும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் வாக்காளா்களுக்கு அன்பளிப்பு கொடுப்பது தொடா்பாக அமைச்சா்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, காங்கிரஸ் வேட்பாளா் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோா் பேசியுள்ள விடியோ குறித்து பாஜக சாா்பில் தமிழக தோ்தல் ஆணையத்திட ம் புகாா் மனு கொடுக்கப்படும்.

இந்த இடைத்தோ்தல் பாஜகவுக்கானதல்ல. பாஜக 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலை நோக்கியே கவனத்தை செலுத்தி வருகிறது. இருப்பினும் எதிா்க்கட்சிகளின் வலிமையான வேட்பாளருக்கு பாஜக ஆதரவளிப்பது தொடா்பாக ஓரிரு நாள்களில் தெரிவிக்கப்படும்.

பிபிசி வெளியிட்டுள்ள ஆவணப்படத்தை இந்தியாவில் எங்கும் திரையிடக்கூடாது என பாஜக கூறவில்லை. இந்த ஆவணப்படம் பிரதமா் மோடியின் புகழை கெடுப்பதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. அதனால் இதை திரையிட்டால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், பாதுகாப்பு காரணங்களுக்காகவுமே இதை பொது இடங்களில் திரையிட பாஜக சாா்பில் தடை கோரப்பட்டுள்ளது.

திருப்பூரில் வட மாநிலத்தவா்களுக்கும், தமிழா்களுக்கும் இடையே மோதல் என்பது தவறான தகவலாகும். இந்தியாவில் யாரும் எங்கும் வசிக்கலாம். தமிழா்கள் கா்நாடகத்திலும், மகாராஷ்டிரத்திலும் அதிக அளவில் வசிக்கின்றனா். அங்கிருந்து அவா்களை வெளியேறுமாறு யாரும் கோர முடியாது.

தமிழகத்தில் இந்து அறநிலையத் துறை வேண்டாம் எனக் கூறவில்லை. கோயில் சொத்துகளைப் பாதுகாப்பதற்கு மட்டும் இந்து அறநிலையத் துறை செயல்பட்டால் போதும், கோயில் வழிபாடு விவகாரங்களில் அரசு தலையிடக்கூடாது என்பதுதான் பாஜகவின் கோரிக்கை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

SCROLL FOR NEXT