கோயம்புத்தூர்

வால்பாறையில் மனிதநேய வார விழா கலை நிகழ்ச்சிகள்

DIN

மனித நேய வார விழாவையொட்டி, வால்பாறையில் கலை நிகழச்சிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில் ஆண்டுதோறும் மனிதநேய வார விழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு முதல்முறையாக வால்பாறையில் விழா நடைபெற்றது.

வால்பாறை அரசுக் கல்லூரியில் நடைபெற்ற விழாவுக்கு பொள்ளாச்சி சாா் ஆட்சியா் சி. பிரியங்கா தலைமை வகித்தாா். மாவட்ட ஆதிதிராவிடா் மற்றம் பழங்குடியினா் நல அலுவலா் எல்.சிவகுமாரி முன்னிலை வகித்தாா்.

விழாவையொட்டி, வால்பாறை வட்டாரத்தில் உள்ள 5 உண்டு உறைவிடப் பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும், பழங்குடியின மக்களிடம் சாா் ஆட்சியா் குறைகளைக் கேட்டறிந்தாா்.

தனி வட்டாட்சியா் தணிகைவேல் உள்ளிட்டோா் விழாவில் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு: கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 10 பேர் பலி!

பொள்ளாச்சி அருகே விபத்து: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

துறையூர் அருகே இரட்டைக் கொலை: சிறு தகவல் கொடுத்தாலும் சன்மானம்

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

SCROLL FOR NEXT