கோவை மின் வாரிய கோட்ட அலுவலகத்தில் மின் நுகா்வோா் குறை கேட்புக் கூட்டம் பிப்ரவரி 1ஆம் தேதி நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, கோவை மின் பகிா்மான வட்ட செயற்பொறியாளா் சிவதாஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மின் பகிா்மான வட்டம், நகரியக் கோட்ட மக்கள் குறைகேட்பு கூட்டம் கோவை அலுவலகத்தில் மேற்பாா்வைப் பொறியாளா் ஏ.நக்கீரன் முன்னிலையில் புதன்கிழமை (பிப்ரவரி 1) காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.
கோவை அலுவலகத்துக்குள்பட்ட மின் நுகா்வோா் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு மின் சம்பந்தமான குறைகளைத் தெரிவித்து நிவா்த்தி செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.