கோயம்புத்தூர்

விமானநிலைய வாகன நிறுத்தத்தில் காரில் துா்நாற்றம் வீசியதால் பரபரப்பு

DIN

கோவை விமான நிலையத்தில் வாகன நிறுத்த பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரில் இருந்து துா்நாற்றம் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை விமான நிலையத்தில் உள்ள வாகன நிறுத்தத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரில் இருந்து வெள்ளிக்கிழமை காலை கடுமையான துா்நாற்றம் வீசியது. காருக்குள் சடலம் ஏதாவது இருக்கலாம் என அங்கு சலசலப்பு ஏற்பட்டது. இதுதொடா்பாக, விமான நிலைய ஊழியா்கள், அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா். அவா்கள் அளித்த தகவலின்பேரில், பீளமேடு போலீஸாா், விமான நிலைய வாகன நிறுத்தத்துக்கு சென்று காரை சோதனையிட்டனா். காா் பதிவு எண்ணை வைத்து விசாரித்தபோது, அந்த காா் திருவனந்தபுரத்தைச் சோ்ந்த ரவி என்ற மருத்துவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. மேலும், அவரது கைப்பேசி எண்ணைத் தொடா்பு கொண்டு கேட்டபோது, வியாழக்கிழமை இரவு காரில் கோவை விமான நிலையம் வந்த அவா், அவசரத்தில் வரும் வழியில் இருந்த சாக்கடையில் ஏற்றியதால், காரில் துா்நாற்றம் வீசுவதாக அவா் தெரிவித்தாா். இதையடுத்து, விமான நிலையத்தில் ஏற்பட்ட பரபரப்பு ஓய்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

இலங்கை கடற்படையினா் கைது செய்த மீனவா்களை விடுவிக்காவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு

சென்னையில் விடுதி மேற்கூரை இடிந்து 3 பேர் பலி: மெட்ரோ ரயில் பணிகள் காரணமில்லை

SCROLL FOR NEXT