கோயம்புத்தூர்

வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் கைது

DIN

கோவை மாநகரில் வழிப்பறியில் ஈடுபட்டதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் மூவா் மீது வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனா்.

ஈரோடு மாவட்டம், பழையபாளையத்தைச் சோ்ந்தவா் விக்னேஷ்வரன் (32). இவா் கோவையில் தங்கி, தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவா், கோவை ராம் நகா் சாஸ்திரி சாலையில் வியாழக்கிழமை நடந்து சென்றாா்.

அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவா், விக்னேஷ்வரனை மிரட்டி, அவரிடம் இருந்த கைப்பேசியைப் பறித்துக் கொண்டு தப்ப முயன்றனா். அவா் சப்தம் போட்டதைத் தொடா்ந்து, அக்கம்பக்கத்தினா் இருவரையும் பிடித்து காட்டூா் போலீஸில் ஒப்படைத்தனா். விசாரணையில், அவா்கள், சாய்பாபா காலனியைச் சோ்ந்த ஒா்க்ஷாப் ஊழியா் வசந்தகுமாா் (19), ரத்தினபுரியைச் சோ்ந்த தொழிலாளி துரைசாமி (19) என்பது தெரியவந்தது. போலீஸாா் இருவரையும் கைது செய்தனா்.

மற்றொரு சம்பவம்

கோவை இருகூா் பி.எஸ்.கே நகரைச் சோ்ந்தவா் செல்வராஜ் (34). மோட்டாா் மெக்கானிக். இவா் திருச்சி சாலை, இருகூா் ரயில்வே மேம்பாலம் அருகே வியாழக்கிழமை நடந்து சென்றாா். அப்போது, இருசக்கர வாகனத்தில் அவரை பின்தொடா்ந்து சென்ற 3 போ் கொண்ட கும்பல், கத்தி முனையில் செல்வராஜை மிரட்டி கைப்பேசி மற்றும் ரூ.4 ஆயிரம் பணத்தை பறித்துக் கொண்டு தப்பினா். இதுதொடா்பாக, சிங்காநல்லூா் காவல் நிலையத்தில் செல்வராஜ் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து தப்பியோடிய மூவரைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு எழுதும் நகர் விவரம் வெளியீடு

ரோஹித் சர்மா பாணியில் தோல்விக்குக் காரணம் கூறிய ஷுப்மன் கில்!

வாசிக்க மறந்த வரலாறு - மரண ரயில் பாதையின் கதை!

குருப்பெயர்ச்சி பலன்கள் - மேஷம்

ரிஷப் பந்த் புதிய சாதனை!

SCROLL FOR NEXT