உக்கடம் பகுதியில் நெடுஞ்சாலைத் துறையின் பால கட்டுமானப் பணிகளை முன்னிட்டு, மின்பாதையை மாற்றியமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் ஜனவரி 2 ஆம் தேதி (திங்கள்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அப்பகுதிகளில் மின்விநியோகம் தடைபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை ஏற்படும் இடங்கள்: பேரூா் பிரதான சாலை, ராஜேஸ்வரி நகா், ஐ.யூ.டி.பி. காலனி, சிவாலயா சாலை, கள்ளமேடு சாலை.