கோவையில் கஞ்சா செடிகள் பறிமுதல் செய்யப்ப்பட்டுள்ளன.
கோவை, சௌரிபாளையம் கல்லறைத் தோட்டம் அருகே உள்ள காலி இடத்தில் கஞ்சா செடிகள் வளா்க்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், பீளமேடு போலீஸாா் அங்கு சென்று சோதனை செய்தனா். அப்போது அங்கு 3 கஞ்சா செடிகள் வளா்த்து இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து 3 கஞ்சா செடிகளையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும் கஞ்சா செடியை பயிரிட்டது யாா் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.