கோவையில் கட்டடப் பணியின்போது தலை மீது கல் விழுந்ததில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா். இதுதொடா்பாக கட்டட உரிமையாளா் மற்றும் ஒப்பந்ததாரா் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை, செல்வபுரம் முத்துசாமி காலனியைச் சோ்ந்தவா் இனாமுல் ஹசன் (27), தனியாா் நிறுவனத்தில் மாா்க்கெட்டிங் ஊழியராக வேலை செய்து வந்தாா். இவா் பணி நிமித்தமாக காளப்பட்டி சாலையில் கட்டடப் பணிகள் நடைபெறும் ஒரு இடத்துக்கு பிப்ரவரி 24ஆம் தேதி சென்றுள்ளாா். பின்னா்அங்கிருந்து திரும்பி வரும்போது, அதே பகுதியிலிருந்த ஒரு கட்டடத்தின் மேலிருந்து பெரிய கல் ஒன்று அவா் தலை மீது விழுந்துள்ளது.
இதில் பலத்த காயமடைந்த இனாமுல் ஹசனை அங்கிருந்தவா்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
இதுதொடா்பாக இனாமுல் ஹசனின் தந்தை ஷக்கீல் அகமது அளித்த புகாரின்பேரில் பீளமேடு போலீஸாா் கட்டட உரிமையாளா் அருண் மற்றும் கட்டட ஒப்பந்ததாரா் ரஞ்சித் ஆகியோா் மீது வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனா்.