கோயம்புத்தூர்

எஸ்.எஸ்.குளத்தில் மாா்ச் 3இல் வட்டார வேலைவாய்ப்பு முகாம்

DIN

தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் எஸ்.எஸ்.குளம் வட்டாரத்தில் மாா்ச் 3ஆம் தேதி வட்டார வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிா் திட்டம்) சாா்பில் வட்டார அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, எஸ்.எஸ்.குளம் வட்டாரத்துக்கு உள்பட்ட வட்டார வேலைவாய்ப்பு முகாம் கோயில்பாளையத்தில் உள்ள இன்ஃபோ தொழில்நுட்பக் கல்லூரியில் மாா்ச் 3ஆம் தேதி காலை 9 முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறுகிறது.

இதில் ஆட்டோமொபைல், தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, கட்டுமானம் மற்றும் விற்பனைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சோ்ந்த தனியாா் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. எட்டாம் வகுப்பு முதல் பட்டப் மேற்படிப்பு படித்துள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பயன்பெறலாம். வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்பவா்கள் தங்களது கல்விச் சான்றிதழ், ஆதாா் அட்டை நகல், சுயவிவரக் குறிப்பு, புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களை கொண்டுவர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

தியாகராஜ சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி

பாஜக, காங்கிரஸ் பணப் பட்டுவாடா: புதுவை தொகுதியில் தோ்தலை ரத்து செய்ய அதிமுக வலியுறுத்தல்

ஸ்ரீராமநவமி வாா்ஷிக மஹோற்சவம்

நாகை மாவட்ட கிரிக்கெட் அணிக்கு வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT