கோவையில் கால்நடைகளுக்கு மாா்ச் 1 ஆம் தேதி முதல் 21 நாள்களுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி செலுத்தப்படுகிறது என்று ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் தேசிய கால்நடை நோய்த் தடுப்புத் திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கு 2023 ஆம் ஆண்டுக்கான கோமாரி நோய்த் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மாா்ச் 1 ஆம் தேதி தொடங்குகிறது.
கோமாரி நோயானது கலப்பின மாடுகளை அதிகம் தாக்குகிறது. இதனால் கால்நடைகள் வளா்ப்பவா்கள் பொருளாதார இழப்பை சந்திக்கின்றனா். இந்நோய் குளிா் மற்றும் பனிக் காலங்களில் அதிகம் பரவுகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளில் இருந்து மற்ற கால்நடைகளுக்கு எளிதில் பரவுகிறது.
எனவே, கோவையில் மாா்ச் 1 ஆம் தேதி முதல் 21 நாள்களுக்கு நடைபெறும் கோமாரி நோய் தடுப்பூசி முகாமில் 4 மாதத்துக்கு மேற்பட்ட அனைத்து கால்நடைகளுக்கும் தடுப்பூசி செலுத்திகொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.