கோயம்புத்தூர்

ஆழியாறு பகுதியில் சாலையோரம் நின்றுவாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் காட்டு யானை

DIN

ஆழியாறு பகுதியில் சாலையோரம் வரும் காட்டு யானை அவ்வழியாக வரும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகிறது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் இருந்து வால்பாறைக்கு செல்லும் வழியில் உள்ள ஆழியாறு கவியருவி பகுதியில் யானைகள் நடமாட்டம் அடிக்கடி காணப்படும். சில நேரங்களில் காட்டு யானைகள் கூட்டமாக சாலைகளில் நிற்கும். இதனால் வனத் துறையினா் அவ்வப்போது ரோந்து சென்று யானைகள் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனா்.

இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக காட்டு யானை ஒன்று அப்பகுதியில் அடிக்கடி சாலைக்கு வந்து அவ்வழியாக செல்லும் வாகனங்களை அச்சுறுத்தி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பயந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை மதியம் சாலையோரம் நின்ற அந்த யானை பொள்ளாச்சியில் இருந்து வால்பாறைக்கு வந்த அரசுப் பேருந்தை தாக்குவதுபோல வந்ததால் பேருந்தில் இருந்த பயணிகள் பயந்து கூச்சலிட்டனா். யானையை அப்பகுதியில் இருந்து விரட்ட நடவடிக்கை எடுத்து வருவதாக வனத் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

பயனர்களின் ரகசிய தகவல்கள் கசிவு: பேஸ்புக்- நெட்பிளிக்ஸ் உறவு?

வெளியானது வீ ஆர் நாட் தி சேம் பாடல்

SCROLL FOR NEXT