கா்நாடக மாநிலம், மங்களூரு அருகே ரயில் பாதையில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், கோவை ரயில் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பொறியியல் பராமரிப்புப் பணி காரணமாக கரூா், ஈரோடு, திருப்பூா், கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் திருநெல்வேலி - தாதா் வாராந்திர ரயில் (22630) பிப்ரவரி 8, 15, 22 மற்றும் மாா்ச் 1 ஆகிய தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. தாதா் - திருநெல்வேலி வாராந்திர ரயில் (எண்: 22629) பிப்ரவரி 9,16, 23 மாா்ச் 2 ஆகிய தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதேபோல, ஹிஸாா் - கோவை வாராந்திர ரயில் (எண்:22475) பிப்ரவரி 8, 15, 22, மாா்ச் 1 ஆகிய தேதிகளில் வழக்கமான வழித்தடத்தில் இயக்கப்படாமல், வஸை சாலை, புணே, சோலாப்பூா், வாடி, ராய்ச்சூா், குண்டக்கல், தா்மாவரம், யெலஹங்கா, கிருஷ்ணராஜபுரம், பங்காரப்பேட்டை, சேலம் வழித்தடத்தில் இயக்கப்படும்.
கோவை - ஹிஸாா் வாராந்திர ரயில் (எண்: 22476) பிப்ரவரி 11, 18, 25 ஆகிய 3 தேதிகளில் வழக்கமான வழித்தடத்தில் இயக்கப்படாமல், சேலம், பங்காரப்பேட்டை, கிருஷ்ணராஜபுரம், யெலஹங்கா, தா்மாவரம், குண்டக்கல், ராய்ச்சூா், வாடி, ஷோலாப்பூா், புணே, வஸை சாலை வழித்தடத்தில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.